Sunday 12th of May 2024 08:25:58 AM GMT

LANGUAGE - TAMIL
.
மன்னாரில் பெருந்தொகை கேரள கஞ்சா, மஞ்சள் மற்றும் பணம் மீட்பு: இரு பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது!

மன்னாரில் பெருந்தொகை கேரள கஞ்சா, மஞ்சள் மற்றும் பணம் மீட்பு: இரு பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது!


மன்னார் உயிலங்குளம் பகுதில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பெருந்தொகையான கேரள கஞ்சா, மஞ்சள் மற்றும் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் அதனுடன் தொடர்புடைய இரு பெண்கள் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு பகுதியில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் உள்ளிட்ட 5 பேர் கைது இன்று செவ்வாய்க்கிழமை(15) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து உயிலங்குளம் புதுக்குடியிறுப்பு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை(15) அதிகாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 52 கிலோ கேரள கஞ்சா மற்றும் 920 கிலோ மஞ்சள், 17 இலட்சம் ரூபா பணம், லொறி மற்றும் டிரக்டர் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், விசாரனைகளின் பின்னர் குறித்த சந்தேக நபர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE